நாமக்கல் கணேசபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், அப்பகுதியில் சந்துப் பகுதியில் மது விற்பனை செய்து வந்த ஜவகர் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 130 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், பரமத்தி வேலூர் பகுதியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜெகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.