நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கீரம்பூரில், பெங்களூரிலிருந்து கொடைக்கானல் சென்ற சொகுசு பேருந்து அதிகாலை 3 மணியளவில் பைபாஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.