பரமத்தி வேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடத்தில் மாசி மாத சதுர்த்தசி நடைபெற்றது. முன்னதாக விநாயகர், முருகர், நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மன், திருஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், அப்பூதியடிகள் மற்றும் வாரியார் சுவாமிகளுக்கு நாமாவளிகள் கூறி அர்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றது.
21 வகையான திரவியங்களாலும், கலச அபிஷேகமும் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் 12 திருமுறைகள் ஓதலுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், ஆரத்தி, மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மட நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.