திருச்செங்கோடு அருகே, தேவனாங்குறிச்சி பகுதியில் மூன்றடுக்கு மாடி கட்டடத்தில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெயின்டர் பூவரசு (26), உயரழுத்த மின்கம்பி மீது பெயின்ட் ரோலர் மோதியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.