நாமக்கல் மாவட்டம், நல்லுார் கந்தம்பாளையம் அருகே, வசந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் போதை மாத்திரைகள் விற்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் (அக்.,2) இரவு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, இரண்டு பேர் தப்பி ஓடினர்.
போலீசார் பிடித்து விசாரித்த போது, ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த விஷால் கார்த்திக், (27), தனியார் மொபைல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், பரமத்தி அருகே நடந்தை கிராமத்தை சேர்ந்த பிரபு, (23), கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது. இவர்கள் இருவரும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து நல்லுார் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.