
மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல்
பரமத்தி வேலூர் அருகே நஞ்சை இடையார் பகுதியில் இருசக்கர வாகனம் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பரமத்தி வேலூர் காவல்துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்த மணல் கடத்தல்காரர்கள் தங்கள் வாகனங்களை விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.







































