திருச்செங்கோடு அருகே ராஜாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (60) என்ற தொழிலாளி, கடந்த 2 ஆண்டுகளாக மகன் மற்றும் மனைவியை இழந்த துயரத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்செங்கோடு நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.