நாமக்கல் மாவட்ட விவசாய கழகத்தினர், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விவசாயிகளின் ஆவண கோப்புகள் மாற்றுவதில் உள்ள சிரமங்களை சுட்டிக்காட்டி, ராசிபுரம் வருவாய் கோட்டம், பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் ஆகியவற்றை இணைத்து ஒரு வருவாய் கோட்டம் பிரித்து, புதிதாக இரண்டு வருவாய் கோட்டங்கள் அமைக்க வேண்டும் என மனு அளித்தனர்.