எருமைப்பட்டி அருகே பவித்திரம் பகுதியில் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தையில் முட்டான் செட்டி, கஸ்தூரிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வாங்குவதற்காக வருகின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.