கோவையில் நாமக்கல் மாணவி தற்கொலை; இளைஞர் கைது

1039பார்த்தது
கோவையில் நாமக்கல் மாணவி தற்கொலை; இளைஞர் கைது
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஹரிணி, ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். பிரவீன், ஹரிணியிடம் இருந்து ஒன்றரை பவுன் நகை பெற்றுக்கொண்டு அதைத் திருப்பிக் கொடுக்காததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்குத் தூண்டியதாக பிரவீனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி