நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் சந்திரசேகர் நேற்று தனது வேட்பு மனுவை சேந்தமங்கலத்தில் உள்ள தாசில்தார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வழங்கினார். இன்று அந்த மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சந்திரசேகர் வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.