நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட
திமுக செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட
திமுக பொறுப்பாளர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், பரமத்தி வேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.