நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, நந்தகுமார் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் நந்தகுமாரை கைது செய்தனர்.