மல்லசமுத்திரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முதல் பருத்திப்பள்ளி செல்லும் சாலை நபார்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 87 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.