நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வராஜ், தங்கவேல், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.