நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்நிலையில் இன்று உற்சவருக்கு வெள்ளி யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.