திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய நிறைவுக் கூட்டம்

53பார்த்தது
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய நிறைவுக் கூட்டம்
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவின் நிறைவு கூட்டம் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 27.12.2019, 30.12.2019 அன்றும் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. 

இதில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 06.01.2020 இல் பதவி ஏற்றனர். ஒன்றியக் குழு தலைவராக சுஜாதா தங்கவேலு, துணைத் தலைவராக ராஜபாண்டி ராஜவேலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றிய குழு பதவிக்காலம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

இந்த நிலையில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு நிறைவு கூட்டம் மன்ற அரங்கில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் சுஜாதா தங்கவேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜபாண்டி ராஜவேலு, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் செல்லப்பன், இன்பத்தமிழ் அரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Job Suitcase

Jobs near you