நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சந்தைப்பேட்டை மேடு அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த தமிழரசன் (32) மற்றும் விக்னேஷ் (27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.