நாமக்கல் மாவட்டம், வையப்பமலை அருகே உள்ள எஸ். நாட்டமங்கலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின்னர் சந்தனக் காப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.