டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி நாதகவினர் மனு

6104பார்த்தது
டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி நாதகவினர் மனு
சேலம் எடப்பாடி தொகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாதகவினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இருப்பாளி மற்றும் சித்தூர் ஊராட்சிகளில், வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை (எண்: 7277 & 7250) உடனடியாக அகற்ற வலியுறுத்தி, நாதகவினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (மே 15) மனு அளித்தனர். தமிழக அரசு அண்மையில் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கடைகளையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி