திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகப்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்தாமல், எந்த ரவுடிக்கு எந்தப்
பதவி கொடுக்கலாம் என முதல்வர் ஜோசப்
விஜய் ஆலோசித்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியாது என்று அவர் கடுமையாக விமரிசித்துள்ளார்.