திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.