காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் (26) கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக சுர்ஜித் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் தந்தையான SI சரவணனும் வழக்கில் தொடர்புடையவர் என கைதாகியுள்ளார். நேற்று (ஜூலை 30) கைது செய்யப்பட்ட சரவணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஆகஸ்ட் 8 வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. SI & குற்றவாளியின் தாய் கிருஷ்ண குமாரி இதுவரை கைது செய்யப்படவில்லை.