நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் (UCB) செயல்பாடுகளை நவீனமயமாக்கும் நோக்கில், மத்திய அரசு 'சஹாகர் டிஜி பே' மற்றும் 'சஹாகர் டிஜி கடன்' ஆகிய புதிய டிஜிட்டல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 'சஹாகர் டிஜி பே' காகிதமில்லா டிஜிட்டல் பண வழங்கீடுகளை மேற்கொள்ள உதவுகிறது. மேலும், 'சஹாகர் டிஜி கடன்' செயலி, கடன் பெறுவதற்கான தடையற்ற அணுகலை எளிதாக்குகிறது. இந்த செயலிகள் மூலம் 9 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதுடன், 2 ஆண்டுகளில் 1,500 வங்கிகளுக்கு இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.