மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் (IED) குறித்த தகவல்களை சேமித்து பகுப்பாய்வு செய்வதற்கான 'தேசிய IED தரவு மேலாண்மை அமைப்பை' என்ற டிஜிட்டல் தளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு படையின் (NSG) வெடிகுண்டு தரவு மையத்தால் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி உள்துறை அமைச்சகத்தின் கீழ் அதிநவீன கட்டமைப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கவும் புலனாய்வு துறையை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.