செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகளின் கணக்கை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. தாத்தா, பாட்டி பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகளை உரிய ஆவணங்களுடன் வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு சென்று பெற்றோரின் பெயருக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும். இதனை செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட கணக்குகள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.