கேரளாவில் மாவோயிஸ்ட் அல்லது பயங்கரவாத வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. இந்த திடீர் சோதனை எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை. சோதனை முடிவுக்கு பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், எது தொடர்பான வழக்கு என்பது பற்றிய முழு தகவல்களும் வெளியிடப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. இன்று காலை முதலே நீடித்து வரும் என்.ஐ.ஏ சோதனையால் திருச்சி, விருதுநகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.