
ஊட்டி: கீரைகளின் பயன்களை நன்கு அறிந்த பழங்குடியினர்–கலெக்டர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை தாங்கி, பழங்குடியினரின் பாரம்பரிய உணவு குறித்து தயாரிக்கப்பட்ட புகைப்பட புத்தகத்தை நேற்று வெளியிட்டார். நீலகிரியில் வாழும் 8 வகை பழங்குடியினரும் சிறுதானியம், கிழங்கு, கீரை போன்ற இயற்கை உணவுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். கீரைகளின் மருத்துவ குணங்களை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



























