நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் தலைமையில் 16 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய பேருந்துகள் இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டதால், மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.