உதகை நகரின் ரோகிணி ஜங்ஷன் பகுதியில் பயணிகளைப் பிடிக்க மினி பேருந்து ஓட்டுநர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில பேருந்துகள் பயணிகளுக்கு அச்சம் தரும் வகையில் வேகமாகவும் அபாயகரமாகவும் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.