நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிவேகமாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், முன்னால் சென்ற பேருந்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானார்கள். இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.