நீலகிரி: கொழுந்து விட்டு எரியும் தீ (VIDEO)

82பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் நத்தை பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. காலையிலேயே கொழுந்து விட்டு எரியும் தீ விபத்து. கூடலூர் நத்தைப் பகுதியில் பழக்கடை அருகில் போடப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதிகாலை வேளையில் நடைபெற்றதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கிருந்த ஒரு பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி