நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்திப்பூர் சரணாலயத்தில், புலி ஒன்று மானை வேட்டையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகா வனத்துறைக்கு சொந்தமான இந்தப் சரணாலயத்தில் காட்டு யானைகள், மான்கள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும், வேட்டையாடும் முறையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.