சிவகங்கையில் தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற்கான மாற்று வழியையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி, விசில் ஊதுவதை நிறுத்திவிட்டு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட திமுக கவுன்சிலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தூய்மைப் பணியாளரிடம் இருந்து விசிலை பெற்ற அவர், அதனை குப்பைகள் சேகரிக்கும் வண்டியில் போட்டார்.