ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை' என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.