லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.10 கோடி டெபாசிட் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்.17) தள்ளுபடி செய்தது. அவகாசம் கேட்டு ஏற்கனவே 8 வாரங்கள் கடந்துவிட்டதால், இனி கால நீட்டிப்பு வழங்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக விஷால் தரப்பு வாதிட்ட போதும், அதை ஏற்காத நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.