தமிழ்நாட்டில் பெண்களுக்கான சிறப்பு திட்டமாக மகளிர் உரிமைத் தொகை உள்ளது. இதன் மூலம் பெண்கள் பலரும் பலனடைந்து வருகின்றனர். பீகாரின் சமீபத்தில் நடந்த தேர்தல் வெற்றிக்கு அம்மாநில பெண்களே முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டு பெண்களின் வாக்குகளைப் பெற, திமுக அரசு பல திட்டங்களை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000க்கு பதிலான ரூ.1500 வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.