தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜயிடம், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய ‘முன்மாதிரி மாநிலம்’ விருதை அதிகாரிகள் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். 2025-ல் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க எடுத்த முயற்சிகளுக்காக, கடலோர மாநிலப் பிரிவில் இவ்விருது கிடைத்தது. கடந்த
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காகக் கிடைத்த இந்த உயரிய விருதை, புதிய முதல்வரிடம் அதிகாரிகள் தற்போது சமர்ப்பித்துள்ளனர்.