சென்னை திருமங்கலத்தில் OG கஞ்சா தொடர்பான வழக்கில் தொழிலதிபர் உட்பட 3 பேர் கைதுகைது செய்யப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் சரத், முகப்பேரை சேர்ந்த சீனிவாசன், சர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோர் கைதாகியுள்ளனர். கைதான சர்புதீன் முகமது மஸ்தான், நடிகர் சிம்புவின் மேலாளராக பணிபுரிந்தவர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27.5 லட்சம் அதிமுக வியூக அமைப்பாளர் ஹரி என்பவருடையது என தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.