பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு திரும்பும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை–சென்னை ரூ.3,000 ஆகவும், நாகர்கோவில்–சென்னை குறைந்தபட்சம் ரூ.4,000 ஆகவும் வசூலிக்கப்படுவது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.