கேரளாம் மாநிலத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் சிறப்பு லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. நடப்பாண்டு பம்பர் லாட்டரி குலுக்கலின் பரிசுத் தொகையை ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான லாட்டரி டிக்கெட்டை வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் சதீசன் வெளியிட உள்ளார். பரிசுத் தொகை உயர்த்தப்பட்டாலும் லாட்டரி டிக்கெட் விலை ரூ.500 ஆகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.