பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி

6150பார்த்தது
கர்நாடகாவின் மைசூருவில் பலூன் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலூன் விற்பனையாளர் ஒருவர் நேற்று (டிச., 25) உயிரிழந்தார். கர்நாடக கண்காட்சி ஆணையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக கண்காட்சிக்காக ஏராளமான மக்கள் வந்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி