கோடைக்காலத்தில் மாம்பழங்கள் ரூ.100 முதல் ரூ.300 வரை விற்கப்படும் நிலையில், தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ராபல்லி சத்யம், உலகின் மிகவும் விலையுயர்ந்த மியாசாகி ரக மாம்பழத்தைப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது, இந்த பழங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 2 முதல் 2.5 லட்சம் வரை விலை பெறுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுப்பது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என சத்யம் கூறினார்.