'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இது குறித்து விவாதிக்க தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு பார்லிமென்ட் கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு (EC) வழங்கப்பட வேண்டிய அதிகாரத்தின் அளவு விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளதால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.