உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பெயர்ப் பலகை கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 அடி உயர கம்பத்தை பொருத்தும்போது கிரோனோடு இணைக்கப்பட்டிருந்த ரோப் அறுந்து, கார் மீது விழுந்ததில் சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் பிரமுகரான பகதூர் யாதவ் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.