அடகு கடை, வங்கிகளில் அதிக வட்டி இருப்பதால் கிராமப்புற மக்கள், கூட்டுறவு வங்கியை அதிகம் நாடுகின்றனர். தமிழகத்தில் 2 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுக மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினருக்கு தள்ளுபடி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், திமுகவும் புதிய தள்ளுபடி அறிவிப்புகளை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.