சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.27) தமது ஆதரவாளர்களோடு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். தொடர்ந்து, அவர் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். முன்னதாக, அறிவாலயம் வந்த தொண்டர்கள் ‘துரோகி எடப்பாடி' என்ற கோஷமிட்டு, ஓபிஎஸ்-ஐ வரவேற்றனர். அதிமுகவில் இருந்தபோது தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.