தேனி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒட்டுமொத்த ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்துள்ளனர். கம்பம் வடக்கு நகர செயலாளர் ஜெகதீஷ், கம்பம் தெற்கு நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து, மீண்டும் ஆட்சிக்கு வர வாழ்த்திய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விலகியுள்ளனர்.