தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதால், இன்றும் (நவ.16), நாளையும் (நவ.17) ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.