மதுரையில் குப்பைகளைச் சேகரிக்கும் தனியார் நிறுவனமான 'அவர்லேண்ட்' நிறுவனத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்பி சு.வெங்கடேசன் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், "முதல்வரின் பொறுப்பில் உள்ள துறையில் பெரிய மோசடி நடக்கிறது. குப்பைகளை எடுக்காமல் மண்ணை அள்ளிப் பொய் கணக்குக் காட்டி ஊழல் செய்கின்றனர்; இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்" எனக் குற்றம்சாட்டினார்.